Wednesday, August 19, 2015

ஜெயலலிதா அரசின் நான்காண்டு கால சாதனைகள் - ரெண்டு சாம்ப்பிள்.


அதிமுக அரசின் நான்காண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மூன்று நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும் - அதிமுகவினருக்கு சில தினங்கள் முன்பு ஜெயலலிதா கட்டளை..!
‪#‎டெல்ட்டா‬ மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12இல் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை கடந்த நான்கு ஆண்டுகளாக.... அந்த தேதியில் திறக்கபடவேயில்லை...!! அதனால் பொய்த்துப் போனது தான் மிச்சம்..!!
இது தான் அதிமுக அரசின் நான்காண்டுகால ஆட்சிக்கான சாதனைக்கு ஒரு சாம்ப்பிள்..!
2011 ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், அந்த ஆண்டு மட்டும்... மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதிக்குப் பதிலாக முன் கூட்டியே ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்பட்டது. அதை அனைத்து ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பாராட்டி எழுதித் தீர்த்தன.
ஆனால் அப்படி அணை திறக்கப்பட்டதற்கு காரணம், அந்த ஆண்டில் மே மாதம் வரை ஆட்சியில் இருந்த கலைஞரின் திமுக அரசு, நீர் மேலாண்மையை தெளிவாக திட்டமிட்டு, கர்நாடக அரசில் பேசி வேண்டியவர்களுடன் அழுத்தம் கொடுத்துப் பேசி, அதை அரசியல் ஆக்காமல், தண்ணீரைப் பெற்று ஜூன் 12 இல் குறுவை சாகுபடிக்கு திறப்பதற்காக 90 அடிக்கு மேல் நீரை சேமித்து வைத்திருந்தது...!!
ஐயா சேமிச்சு வச்சதத்தான் அம்மா ஆட்சிக்கு வந்து பதினைந்து நாட்களில் ஊரான் விட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு திறந்து வைத்து ஜால்ராக்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார்.
ஆனால் அதற்கு அடுத்து 2012, 2013, 2014 மற்றும் இந்த ஆண்டான 2015 இல்... அதாவது கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களைப் பற்றியோ, விவசாயத்தைப் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாமல், கர்நாடகாவில் இருந்து தண்ணீரையும் பெறாமல், இருப்பதையும் நீர் மேலாண்மை முறையில் சேமிக்காமல், தஞ்சையில் குறுவையை காயவைத்துக் கொண்டிருக்கின்றார்.

திறக்க வேண்டிய ஜூன் 12 க்குப் பதிலாக 60 நாட்கள் கடந்து மேட்டூர் அணை திறக்கப்பட்டது இதுவே முதல் முறை..! இது பசுமைப் புரட்சியில் ஒரு சூப்பர் சாதனை..!
இவருக்குத் தான் தஞ்சை விவசாயிகளின் சார்பாக பொன்னியின் செல்வி பட்டம் கொடுக்கப்பட்டதாக விழா எடுக்கப்பட்டது..!!
நான்காண்டு சாதனைக்கு இது ஒன்றே சான்று..!
=====================================================
பழைய கழிவறை நிருபர் ஒருவர் இப்படி கேட்கிறான்னு வச்சிப்போம்...
காற்றாலை மின்சாரம் ரூ 3.50 க்கு கிடைக்கும் போது, அதை முழுமையாக வாங்காமல், அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தை ரூ. 7.01 க்கு அதாவது 100 சதவிகிதம் கூடுதலாக உங்க ஆத்தா வாங்க முற்படுவதன் காரணம் என்ன???
இதற்கு ஆயிதிமுகவைச் சார்ந்த பழரசமோ, நன்னாரி சர்பத்தோ, சி.ஆர். பாடாவதியோ பதில் சொல்வதாக இருந்தால் எப்படி சொல்லியிருப்பார்கள்??!!
அதாவது நீங்க ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கனும். காற்றாலை மின்சாரம்ங்கறது எப்படி வருது? அதை காற்றிலிருந்து உறிஞ்சி எடுக்குறாங்க. அந்த காத்துல, பூமியிலேர்ந்து வாகனம், தொழிற்சாலை எல்லாம் வெளியிடுற புகைகளால, அளவுக்கு அதிகமா நச்சு கலந்திருக்கு... அதுனால, காத்து கொடுக்குற மின்சாரம் பாதிக்கு பாதி வேஸ்ட்டு...!!
அந்த மின்சாரத்த வச்சி ஃபேனை ஓட்டி பாருங்க, மெதுவாத்தான் சுத்தும்...! லைட்டு கூட மங்கலாத்தான் எரியும்...!! எங்க ஆயா லார்டு லபக்கு தாஸ் ஸ்கூல்ல படிச்சதனால, இந்த விஷயம் எல்லாம் நுணுக்கமா கண்டுபிடிச்சி.... காற்றை விட சூரியன் தான் பவர் ஃபுல்லுன்னு தெரிஞ்சிக்கிட்டு, அதுலேர்ந்து மின்சாரத்தை உறிஞ்சு கொடுக்குற அதானிங்கற ஆள கூட்டிட்டு வந்து உறிய சொல்லியிருக்காங்க.
சூரியனோட வெப்பம் எல்லாத்தையும் பஸ்பமாக்கிடும்ங்கறதுனால, அதுல எந்த நச்சுக் கலப்படமும் இல்லாம, சுத்தமான மின்சாரத்தை உறிய முடியும்... அதுனால அந்த மின்சாரத்துல ஃபேன் ஓட்டுனா நல்லா வேகமா சுத்தி, அதிகமா காத்து கொடுக்கும்ங்கறதுனாலயும், ஒரு ரூமுக்கு மூனு லைட்டுக்கு பதிலா ஒரு லைட்ட போட்டாலே நல்ல வெளிச்சம் கொடுக்கும்ங்கறதுனாலயும்... அதுக்கு கொஞ்சம் கூடுதலா விலை கொடுத்து எங்க ஆத்தா வாங்குறாங்க...!!
இதனிடையே குறுக்கே நுழையும் ஐயா திமுக ஆதரவாளர்...
என்னங்க இது கேனத்தனமா இருக்கு?! ந்னு சொல்லி பேச ஆரம்பிக்க....
கழிவறை நிருபர் தியாகி கொடூரன்... உடனடியாக குறுக்கே நுழைந்து.... ஏதேதோ பேசி இவரை பேச விடாமல், அல்லது பேசுவது வெளியே கேட்காமல் செய்ய.... ஐயா திமுக பேச்சாளர் அநாகரீகமாக நடந்துகொள்வதால்.. ஒரு சிறிய இடைவெளிக்குப் பொறவு ஆட்டம் ஆரம்பமாகும்னு திரை போட்டுவிடுறார்....!!!

No comments: