Wednesday, August 26, 2015

பங்குச்சந்தை பனால்... ஆப் கி பார் மோடிக்கா சர்க்கார்..!

கடந்த ஒரு ஏழெட்டு பத்து வருஷமா, இந்த பங்குச் சந்தைல காசப் போட்டு பணத்தை அள்ளுற ஒரு குரூப்பு வேகமா பெருக ஆரம்பிச்சிடிச்சி...!!

நம்ம ஹர்ஷத் மேத்தா மேட்டர்ன்னு ஒன்னு வெளில வந்த பின்னாடி தான் நம்ம நாட்டுல நூத்துக்கு 95 பேருக்கு பங்குச் சந்தைன்னு ஒரு சமாச்சாரமே காதுக்குள்ள வந்துச்சி...!

 அது அப்படியே அந்த துறைக்கு நல்ல விளம்பரத்தைக் கொடுத்து, முதல் கட்டமா, மேல் நடுத்தர வர்க்கம் எல்லாம் அதுல கொஞ்சமா காலை நனைக்க, அதுக்கப்பறம் ஒரிஜினல் நடுத்தரம் எல்லாம் தானும் காலை நனைச்சுக்கறேண்டா பேர்வழின்னு பல பேரு கொதிக்கிற வெந்நீருல காலை விட்டு சூடு வச்சிக்க....

இப்படியாக கனஜோரா வளர்ந்துச்சி நம்ம பங்குச் சந்தை. இந்தியாவுல நம்ம நடுத்தர வர்க்கம் தான் மிகப் பெரிய ஏமாந்த சோனகிரிங்கறத புரிஞ்சிக்கிட்ட கார்ப்பரேட்டுகள் அனைத்தும், ஊடகங்களை கையில போட்டுக்கிட்டு, அவங்களை மூளைச்சலவை செய்ய ஆரம்பிக்க...

ரிஸ்க் இல்லாத இலகுவான வழி ஒன்னு இதுக்கு அவங்க மூலமாவே அறிமுகப்படுத்தப்பட்டது தான் மியூட்சுவல் ஃபண்ட். விகடன் குழுமத்துல நாணயம் விகடன்னு ஒரு வார இதழ் இதுக்காகவே துவங்குன மாதிரி நடுத்தர வர்க்கத்தை எல்லாம் அதுல இழுத்துப் போட்டுச்சி.
அதுல கொஞ்சம் துளிர்விட்ட நம்மாளுங்க, தாங்களே நேரடியா (பங்குச்சந்தை என்ற இடைத்தரகர் கமிஷன் இல்லாம) களம் இறங்க, டிரைனிங் கொடுக்கிறேன் என்று எக்கச்சக்க பேர் இதில் காசு பார்த்துவிட்டனர்.
தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஊருலயும் இந்த மாதிரி பங்கு வணிக மையங்கள் பல்வேறு நிறுவன பெயர்களில் குறைந்தபட்சம் இருபதாவது இருக்கும். ஒவ்வொன்னுத்திலயும் 50 பேராவது காலைல 10 மணிக்கெல்லாம் டாஸ்மாக் குடிமகன்கள் மாதிரி குத்த வச்சி ஒக்காந்திருப்பாய்ங்க...!!
இதத் தவிரவும் வீட்டுல, ஆஃபீஸ்ல உட்காந்துக்கிட்டு லேப்டாப்ல டிரேடிங் பண்றவங்களும் ஒவ்வொரு ஊருக்கும் சில பல ஆயிரங்கள் தாண்டும்..!!


ஆனா அந்த குருப்பு எல்லாம் எப்பவாவது ஒரு பொது விசேஷம் அல்லது கிளப்புகளில் ஒன்னு சேர்ந்தா, மன்மோகனை திட்டுதிட்டுன்னு திட்டிக்கிட்டு, சிதம்பரத்துக்கு எல்லாம் ஃபினான்ஸ் நாலெட்ஜே கிடையாதுன்னு அலம்பல் விட்டுக்கிட்டு, மோடி வந்தா தான், நம்ம காட்டுல இன்னும் செமையா மழை பெய்யும்ன்னு பேசுவாய்ங்க...!!

சிதம்பரத்தால தான் ரூபாய் மதிப்பு குறைஞ்சி போச்சு, டாலருக்கு நிகரா 63 ஓவா வந்துடிச்சின்னு எல்லாம் பேசுவாங்க...!

என்னைய மாதிரி மாடு மாதிரி உழைச்சு, இவிங்க அளவுக்கு வருமானம் பார்க்காதவிங்க எல்லாம் ஆஆஆன்னு வாயை பிளந்துகிட்டு, இவிங்க பேசுறத வேடிக்கை பார்த்துட்டிருப்பாய்ங்க...!!


நேத்திக்கு, 

ஏஏஏஏழு.... 

லட்சம் 

கோடியாம்...!!


அவ்வளவும் இந்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் பணம் தான்..! ஒக்கே ஒக்க நாள்ல எல்லாம் ஹோகயா...!! நம்மூரு ராமசந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன் பணமெல்லாம் கூட கண்டிப்பா அந்த ஏழு லட்சம் கோடில கரைஞ்சு போயிருக்கும்...!!!

இந்த நடுத்தர வர்க்கம் தன்னை திருத்திக்காத வரை இந்த நாடு உருப்படவே உருப்படாது...!!!


1 comment:

rajamelaiyur said...

பங்கு சந்தையே ஒரு ஊக வாணிகம் தானே !!!அதிகம் வருமானம் பெற ஆசைபட்டால் இழக்கவும் தயாராகத்தானே இருக்க வேண்டும்.