Tuesday, August 18, 2015

சாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..!

1972 -

-தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளையும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசுடமை ஆக்கி.... ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேருக்கு நேரடி அரசு வேலையும்..., இந்தியாவிலேயே மிகக் குறைவான கட்டணத்தில் பேருந்து சேவையும், தமிழகத்தின் குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணத்திற்கும் வழி வகை செய்தார்...!!
1981 -

-1973 முதல் 8 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி, தமிழகத்தில் மீண்டும் மது விற்பனையை துவக்கி வைத்தார்.... அன்றைய முதல்வர் எம்.ஜி. ஆர்..!
1983 -

- தமிழகத்தில் இருந்த அனைத்து தனியார் மது மொத்த விற்பனையாளர்களையும் தடை செய்து.... முதன் முதலாக மது மொத்த விற்பனையையை முற்றிலும் அரசுடமை ஆக்கினார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்...! அவர் அந்த விற்பனைக்காக நிறுவிய நிறுவனம் தான், இன்றைக்கு அனைவரும் தடை செய்யக் கோரி போராடிக் கொண்டிருக்கும் அந்த “டாஸ்மாக்” !!
2003 -

- தமிழகத்தில் முதன் முறையாக தனியாரிடம் இருந்த அனைத்து மது விற்பனை கடைகளையும் அரசுடமை ஆக்கினார்... அன்றைய முதல்வர் ஜெயலலிதா..!! டாஸ்மாக் நிறுவனம் மூலம் தன் குருநாதர் மொத்த விற்பனையை மட்டும் மேற்கொண்ட நிலையில்... சீடரான ஜெயலலிதா, அதே டாஸ்மாக் நிறுவனம் மூலம் சில்லறை வணிகத்தினையும் அரசுடமையாக்கி திட்டத்தை விரிவுபடுத்தினார்...!!!
சுறுங்கச் சொல்ல வேண்டுமானால்.....

- பேருந்துகள் அரசுடமை = கலைஞர்!
- சாராய மொத்தவிற்பனை அரசுடமை = எம்.ஜி.ஆர்.!
- சாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..!

No comments: