Friday, August 14, 2015

திமுக.... கொஞ்சம் மாத்தி யோசிக்கனும்..!

திடீர்ன்னு கலைஞர் ஊழல் பண்ணிட்டாருன்னு முப்பது, நாற்பது புகார் அடங்கிய பட்டியலை கொடுப்பாங்க. அதை ரேடியோல, பேப்பர்ல ஃப்ளாஷ் பண்ணுவாங்க. அதுக்கெல்லாம், அடிப்படை, ஆதாரம், லொட்டு, லொசுக்குனு எந்த கந்தாயமும் இருக்காது. அதை விசாரிக்கிறதுக்கு சர்க்காரியான்னு ஒரு கமிஷனை அமைத்து தினம் தினம் அந்த செய்திகள் பேப்பர்ல வர்ற மாதிரி பார்த்துப்பாங்க.
மக்களும் அதை வாய பொளந்து பார்த்துக்கிட்டே இடையில் வருகின்ற பொதுத் தேர்தல்ல கலைஞரை தோற்கடிச்சிடுவாங்க. கலைஞரும் ஒவ்வொரு புகாருக்கும் விளக்கத்துக்கு மேல விளக்கம் கொடுத்து அசராம அடிச்சு ஆடுவாரு. அதுக்கப்பறமா அந்த புகர்ல ஒன்னுத்துக்கு கூட ஆதாரமோ, முகாந்திரமோ இல்லன்னு தூக்கி கடாசிட்டு போயிட்டே இருப்பாங்க. ஆனா இடைப்பட்ட காலத்துல கலைஞர் ஆட்சியை இழந்திருப்பார்.
திரும்பி போராடி கீராடி அவர் ஆட்சியை பிடிச்சார்ன்னா...., விடுதலைப் புலிகளை வச்சி ராஜீவ் காந்திய கலைஞர் கொன்னுட்டாருன்னு ஜஸ்ட் லைக் தட் புகார் வாசிப்பாங்க... வழக்கம் போல மக்கள் வாய பொளக்குறதும், கலைஞர் ஆட்சியை இழக்குறதும்... கடேசில, கலைஞருக்கும் அதுக்கும் சம்பந்தமில்லைன்னு தீர்ப்பு வர்றதும் நடக்கும்...!!
மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருவார்... இப்ப யாருமே நம்ப முடியாத அளவுக்கு ஒரு தொகையை, ஒன்னே முக்கால் லட்சம் கோடி கலைஞரோட மந்திரி ஊழல் பண்ணிட்டதா சொல்லி நியூஸை பரப்புவாங்க... மீண்டும் மக்கள் வாயை பிளப்பாங்க.... ஆட்சி பறிபோகும்... கேஸு கிட்டத்தட்ட ஊத்திக்கிற நிலைக்கும் வந்து விட்டது....
அதாவது அவிங்க பாட்டுக்கும்... அவதூறை அள்ளி வீசி மீடியால ஃப்ளாஷ் பண்ணிடுவாங்க. கலஞரும் திமுக தரப்பும் அதை பொய்யின்னு சொல்லி ப்ரூஃப் பண்ணிட்டு வெளில வர்றத்துக்குள்ள் ஆட்சி போயி அவிங்க வந்து உட்கார்ந்திடுவாங்க....!
இதே டிரெண்டைத்தான், தளபதியிடமும் அவாள்லாம் அப்ளை பண்ணியிருக்கா...!! இவர் கரை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்ன்னு தெரியும். அதனால ஊழல் புகர் சொல்றது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு முடிவு பண்ணி, இவர் மக்களோட மக்களா பழகுறதுனால தான இவரோட இமேஜ் கூடுதுன்னு....
அதுக்கு ஆப்பு வக்கிற மாதிரி மெட்ரோ பளார்ன்னு ஒரு டிரெண்டிங்கை உருவாக்கினாங்க. அதுக்கு தளபதியே விளக்கம் கொடுத்து, சம்பந்தப்பட்ட நபரே மறுத்தவுடன், விவகாரம் முடிவுக்கு வந்தாலும், தளபதி தொண்டரை கன்னத்தில் அடித்தாரா? என்ற விவாதத்தை மக்களிடம் முன்னெடுக்க வைத்ததில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
இதற்கு மேலும் இப்படிப்பட்ட விஷயங்களை திமுக வழக்கம் போல கடந்து செல்வது நல்லதல்ல. இது போன்ற விஷயங்களை முன்னெடுப்பவர்கள் மீது அவதூறு வழக்கை முன்னெடுத்து, இன்னும் பலமாக தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க வேண்டும். இதற்கு மேலும் டிஃபன்ஸ் ஆடிக் கொண்டிருப்பது திமுகவுக்கு பலனளிக்காது. எதிரிகளை டிஃபன்ஸ் ஆட வைக்க வேண்டும்.
இது போன்ற டீவி விவாதங்களில் திமுக சார்பாக யாரும் கலந்து கொள்ளக் கூடாது. அதை கடுமையான அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தி விட்டு... இந்த மாதிரியான அவதூறு விவாதங்களுக்கு சட்ட ரீதியாக தடை வாங்கவும் வேண்டும். பலமாக எதிர்க்கும் போது தான் மக்களும் திமுகவை நம்புவார்கள்.

திமுக.... கொஞ்சம் மாத்தி யோசிக்கனும்..!

No comments: