Tuesday, January 13, 2015

ஜல்லிக்கட்டுன்னா.... ஏன் மல்லுக்கட்டுறாஆஆஆ??!!


ஒவ்வொரு வருஷமும் ஜல்லிக்கட்டு நடக்கும் போது சொம்ப தூக்கிக்கிட்டு அம்பிகளும் அவா ஆத்து ஆண்ட்டிகளும் வந்து குந்திகிடுறாய்ங்க. டீவில பேப்பர்ல, கோர்ட்லன்னு ஒரே புலம்பல்.... மாடுகளை எல்லாம் கஷ்டப்படுத்துறதா...!!!
எனக்கு நினைவு தெரிஞ்சி, ஜல்லிக்கட்டு நடக்கறச்சே எல்லாம், மாட்டுக்கு அடிபட்டு காயமாயிடிச்சி, மாடு செத்துப்போச்சின்னு வந்த செய்தியை விட, இத்தனை இளைஞர்கள் மாடு முட்டி காயமடைந்தனர், இத்தனை இளைஞர்கள் உயிரிழந்தனர்ன்னு தான் செய்தி வருது....!!!
ஒரு இனம் தன்னுடைய வீரத்தை, மன உறுதியை, தைரியத்தை, மனக்கட்டுப்பாட்டை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கும், உலகத்திற்கு எடுத்துக்காட்டவுமான களம் அல்லது தளம் அது...!!!
அதில் இவர்களுக்கு என்ன வந்தது??? எவனும் எங்கேயும் வீரத்தைக் காட்டிடக் கூடாது... ஹிந்தி கத்துண்டா வேலை கிடைக்கும்ன்னு நம்பிட்டிட்டிருக்குற சொம்பைகளாகத் தான் எல்லோரும் மாற வேண்டும்... எல்லோருமே தன் சொந்த ஊரில் இருந்து மாற்றுப் பிரதேசத்தில் இருந்தால், முதலில் மொழியை அடமானம் வைக்கும் போதே தன்மானம், வீரம், போராட்ட குணம் இவை அத்தனையும் கூடவே அடகு போய்விடும் என்பது தான் சூத்திரம்...!!
இந்த அடமானத்திலிருந்து அவற்றையெல்லாம் மீட்க, அவனவன் சொந்த ஊரில் நடக்கும் இது மாதிரியான வீர விளையாட்டுக்களும்,,பாரம்பரிய விழாக்களும் தான் ஒரே உந்துசக்தி!!!
அதையும் அடித்து நொறுக்கிவிட்டால், இவன் காலம் முழுவதும் சொம்பையாகவே இருக்க வேண்டியது தான். ஒரு மூன்று பேர், இவனைப் போன்ற 97 சொம்பைகளை எப்பொழுதும் அடிமையாகவே வைத்து ஆளலாம்...!!!
ஜல்லிக்கட்டை முடக்கியாச்சின்னா, அடுத்தடுத்து, வீரன் பூஜை, முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கிறது, சுடலைமாடனுக்கு படையல் போடுவது, மாரியம்மனுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்துறது.... இப்புடிக்கா போயி பொங்களுக்கு விடுமுறை இல்லன்னு அறிவிக்கிறது வரைக்கும் போயி நின்னு... கடேசில திரும்பிப் பார்த்தா, நம்ம அடையாளமே இல்லாம அம்மணமா நிக்க வேண்டியிருக்கும்...!!!

இது ஒட்டுமொத்த தமிழகத்தின்..., தமிழர்களின் பிரச்சினை...!!

இதெல்லாம் வேண்டும்.... தடைசெய்யக் கூடாதுன்னெல்லாம் போராட்டம் செய்வதை விட... உலகறிய கபடித் திருவிழாவை நடத்திடுவோம்.... தமிழகத்தின் சிறு சிறு கம்பெனிகளில் துவங்கி... படிப்படியாக பெரிய நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஸ் பிடித்து, வருடத்திற்கு ஒரு முறை ஒன்னரை மாதங்களுக்கு கபடி லீக் மேட்ச் நடத்தி, கிரிக்கெட்டை ஓரம் கட்டுவோம், கபடியை மக்கள் மன்றத்தில், இளைஞர்கள் மட்டத்தில், பெண்களை ஈர்க்கும் வகையில் பிரமோட் செய்வோம்...!
கிரிக்கெட் விளையாடி நிறைய பேர் உயிரிழந்திண்டிருக்கா... அதுனால கிரிக்கைடை தடை செய்வோம்ன்னு ஒரு ரிட்டும் போட்டு வைக்கலாம். கிரிக்கெட் அடிவாங்கும் போது அலறித்துடிப்பார்கள்... நம்மை நோண்டுவதை விட்டுவிட்டு, அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள கவனத்தை திசை திருப்புவார்கள்.

ஒரு கோட்டை சின்னதாக்க அதை அழிக்க வேண்டாம்... அதனருகில் நாம் ஒரு பெரிய கோட்டை போடுவோம்...!

2 comments:

கொக்கரக்கோ..!!! said...

அனானிகள் வரம்பு மீறி பேசுவதை தவிர்க்கவும். தைரியம் இருந்தால் சொந்த பெயரில் கமெண்ட் செய்யுங்கள்.

கொக்கரக்கோ..!!! said...

உங்களைப் போன்று அநாகரீக வார்த்தை பிரயோகிப்பவர்களுக்காகத் தான் கமெண்ட் மாடரேஷன் வைத்துள்ளேன். நீங்கள் அநாகரீகமாக எத்தனை கமெண்ட் போட்டாலும் டெலிட் செய்யப்படும்.