Monday, December 22, 2014

மகளிர் சுய உதவி குழுக்களும், மதவாத ஆட்சியின் காட்டமும்...!


பொதுவாகவே எந்த மதத்தைச் சார்ந்த மத அடிப்படைவாதிகளானாலும் அவர்களது கண்களை அதிக அளவில் உறுத்துவது, பெண் சுதந்திரம் தான். பெண்களின் மீதான அடக்குமுறை, ஆளுமை போன்றவை என்பது மத அடிப்படைவாதிகளுக்கேயான அடிப்படை விருப்ப குணாதிசயம்.
மத அடிப்படைவாதத்திற்கும், மூடப் பழக்கங்களுக்கு எதிரான கொள்கையோடும் உருவானது தான் திராவிட இயக்க சித்தாந்தம் என்றால் அதை யாரும் மறுக்க இயலாது.
அந்த வகையில், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதியை இடஒதுக்கீட்டின் மூலமும், பல்வேறு ஆட்சியதிகார சட்டங்களினாலும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தலும்.... உண்மையான திராவிடக் கட்சியான திமுகழகம் தனது ஆட்சிக்காலங்களில்... பெண் விடுதலை, பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் சம உரிமை, பெண் சுயசார்பு நிலை.... இப்படியாக பெண்களுக்கான முன்னேற்றத்திற்கு பல செயல்திட்டங்களைத் தீட்டி அதை நடைமுறைப்படுத்தியும் இருக்கின்றது....!

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை.., கல்லூரி வரை பெண்களுக்கு இலவச கல்வி, படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டு... இப்படியாக பெண்களை கடந்த 30 ஆண்டுகளில் ஆண்களுக்கு இணையாக கல்வி, வேலை வாய்ப்பு... சொத்துரிமை இப்படியாக அனைத்து துறைகளிலும் வகைகளிலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் போடப்பட்ட திட்டங்கள் உயர்த்திக் கொண்டு வந்திருக்கின்றன.

அந்த வகையில் கிராமப்புற, அடித்தட்டுப் பெண்களையும் பொருளாதார ரீதியிலாக சுயசார்புநிலைக் கொண்ட சுதந்திரப் பெண்மணிகளாக மாற்றும் பொருட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து, அவர்களுக்கான சின்னச் சின்ன குடிசைத் தொழில்களுக்கான நிதி உதவிகளையும் விற்பனை வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி, அதிலும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்திற்கு தானே நேரிடையாக ஒவ்வொரு மகளிருக்கும் சுழல்நிதியை வழங்கி, ஊக்கப்படுத்தியதன் மூலம், இன்றைக்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள், நாள்தோரும், வங்கிகளில் பணம் எடுப்பதும், போடுவதுமாக பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றுத் திகழும் நிலையினை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆனால், கணவன் இறந்தால், தானும் உடன்கட்டை ஏறி உயிர்விடும் நிலையில் இருந்த பெண்களைக் காப்பாற்றி அவர்கள் மறுமணம் செய்துகொள்கின்ற அளவிற்கு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையில், இன்றைக்கு மீண்டும் உடன்கட்டையை அறிமுகப்படுத்தத் துடிக்கும் சில மத அடிப்படைவாதிகளின் அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதை பார்த்து திகைத்துக்கொண்டிருக்கும் வேலையில்....
மதவாதக் கட்சியான பாஜகவின் அமைச்சர் ஒருவர்... அதிலும் பெண் அமைச்சர்.... இந்த மகளிர் சுய உதவிக் குழுவை மூடுவதற்கான முஸ்தீபுகளைத் துவங்கி அறிக்கை விடுத்திருக்கின்றர்....!!!

இதோ... திராவிட இயக்கத்துச் சிங்கங்கள்  கலைஞரும்,  எம் கே எஸ் அவர்களும் இந்த அறிவிப்பை எதிர்த்து மிகக் காட்டமாக அறிக்கை கொடுத்திருக்கின்றனர். தேவைப்படுமெனில் கடும் போராட்டத்தையும் முன்னெடுக்க தயாராயிருக்கின்றார்கள்...!!!
ஒட்டுமொத்த தமிழக மக்களும் இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ மகளிர்... அதிலும் கிராமத்தில் இருக்கின்ற பெண்களுக்குத்தானே பிரச்சினை என்று அமைதியாகக் கடந்து செல்ல முற்படுவீர்களேயானால்....
....மதவாதிகளின் அடுத்த அபிலாஷையான சமூக அநீதி முன்னெடுக்கப்படும்... இட ஒதுக்கீடுகள் தவிடுபொடியாகிடும்..., உம்முடைய வாரிசுகள் அனைவரும் இன்னும் பத்தாண்டுகளில் உங்கள் மூதாதையார் பார்த்துக்கொண்டிருந்த குலத்தொழிலைச் செய்யச் செல்ல வேண்டியிருக்கும்....!!!

பார்ப்பனரல்லாத வளர்ந்த தமிழ்ச் சமுதாயமே... இதையெல்லாம் சந்திக்க தயாராகவிருக்கின்றீர்களா????!!!!


No comments: