Wednesday, December 17, 2014

சொல்லுங்கள் மக்களே சொல்லுங்கள்.! இப்படிக்கு மாக்களின் முதல்வர் மனசாட்சி..!!

கடந்த மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக மக்கள் தலையில் பேரிடியாய் வந்து விழுந்திருக்கும் இந்த மின் கட்டண உயர்வுக்கு முற்றும் முழுதாக, ஆதி முதல் அந்தம் வரையான காரணம் என்றால் அது கடந்த காலங்களில் நடைபெற்ற திரவிட முன்னேற்ற கழக ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகள் தான்...!!! 
இப்படிக்கு மாக்களின் முதல்வர் மற்றும் திராவிட இயக்க சித்தாந்தங்களை எதிர்க்கும் கூட்டமைப்புகளின் மைண்ட் வாய்ஸ்கள்...!!!
======================================================================
மக்களே இதை உங்களுக்கு புரிய வைக்க, கொஞ்சம் தெளிவாக, விளக்கமாக, எழுத வேண்டியுள்ளதால், பொறுமையாக முழுமையாக படித்து எங்கள் பக்கத்து நியாயத்தை புரிந்துகொள்ளுங்கள்....!!!  இப்படிக்கும்... அதே கூட்டமைப்புக்களின் மைண்ட் வாய்ஸ்கள்...!

திமுக என்ற கட்சி முதன்முதலாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழகத்தில் பார்ப்பரனல்லாத மற்றும் உயர்நிலை சாதிக்காரர்கள் தவிர்த்து கிட்டத்தட்ட 65 சதவிகித பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே, பள்ளிக் கல்லூரிப் படிப்புகளை அனுபவிப்பது கிட்டத்தட்ட 5 சதவிகிதத்திற்கும் குறைவானதாகத்தான் இருந்தது. அவரவர் தத்தமது குலத்தொழிலையோ அல்லது கூலி வேலை செய்வதையோ தான் தொழிலாக கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் சொல்லிக்கொள்கிற மாதிரியாக ஒன்றிரண்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே நான்கைந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலையில் இருந்தது. மற்றபடி அரசு அலுவலக பணியாளர்களைத் தவிர வேறொரு வேலை வாய்ப்பிற்கான வசதியும் இல்லாத நிலையில்.... டிகிரி முடிக்கும் சொற்ப நபர்களும் வேலைக்காக மும்பை, டெல்லி, கொல்கத்தா என்று தான் செல்ல வேண்டியிருந்தது.
ஆகவே தமிழகத்தைச் சார்ந்த கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள், சராசரிக்கும் மிகக் கீழான அடித்தட்டு வாழ்க்கை நிலையினையே பெற்றிருந்த நிலையில்... அவர்களது இல்லங்களில், மின் விசிறி, அயர்ன் பாக்ஸ், டீவி, டிவிடி, வாட்டர் ஹீட்டர், மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், தண்ணி மோட்டார், டியூப் லைட், செல்ஃபோன் ரீசார்ஜர்ஸ், ரேடியோ.... இப்படியாக எந்த மின் உபயோகப் பொருட்களுமே கிட்டத்தட்ட எந்த வீட்டிலும் கிடையவே கிடையாது....!!
வீதிகளில் கூட எங்காவது ஒரு மூலையில் வெறும் குண்டு பல்பு மட்டுமே எரியும், கிராமங்களில் அதுவும் கிடையாது. விவசாயிகளுக்கு போர்செட் வசதியும் கிடையாது.
ஆகவே தொழிற்சாலைகள் கிடையாது, பள்ளி, கல்லூரிகள் மிக மிக குறைவு, விவசாயத்திற்கும் மின்சாரம் கிடையாது, 70 சதவிகித வீடுகளில் மின் இணைப்பே கூட கிடையாது, இருப்பவர்களும் மாததிற்கு 50 யூனிட் அளவுக்கு கூட பயன்படுத்த முடியாத உபகரணங்கள் தான் வைத்திருந்தார்கள்.... இக்காரணங்களால், ஒட்டுமொத்த தமிழக மின் தேவையே இப்பொழுது இருப்பதில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே இருந்தது....!!!
இப்படிப்பட்ட ஒரு அற்புதமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழக மக்களின் நிம்மதியைக் குறைக்கும் வண்ணமாக முதன் முதலாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர ஆரம்பித்த காலத்தில் இருந்து தான், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்து, அவர்கள் பள்ளி, கல்லூரி, அரசு வேலைகள் என்று நுழைய ஆரம்பித்தனர், ஒரு கட்டத்தில் மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும் இவர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித்தார்கள். தேவைக்கேற்ப அவர்களது அரசு இன்னும் புதிது புதிதாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்க ஆரம்பித்தது. அதுவும் போதாமல் தனியாருக்கும் பள்ளி, கல்லூரி திறக்க அனுமதி அளித்தனர். இன்னும் நிறைய பேரை ஊக்கப்படுத்த, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்விக்கட்டண சலுகை, பெண்களுக்கு இலவச கல்வி, படித்த பெண்களுக்கு திருமணத்திற்கு உதவி... படித்த இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க, மத்திய அரசோடு கூட்டணி அமைத்து மத்திய ஆட்சிகளில் பங்கெடுத்து, அதனைப் பயன்படுத்தி, எக்கச்சக்கமான வெளிநாட்டு தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவந்து கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது.... இன்னமும் படிக்காமல், கூலி வேலை செய்யும் பாட்டாளி பெருமக்களுக்கு இங்கேயே அதிக சம்பளத்தில் வேலை கொடுப்பதற்கு, அரசு அலுவலகங்கள், சாலைகள், பாலங்கள், கிராமங்கள் தோறும் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள், கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்கள்... இப்படியான மக்களுக்குத் தேவையான தொலைநோக்குத்திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்துவதன் மூலம், இந்த பாட்டாளி பெருங்குடி மக்களுக்கும் அதிக சம்பளத்துடன் வருடம் முழுக்க வேலைவாய்ப்பை வழங்கியும், விவசாயம் பொய்த்துப்போகாமல் காப்பாற்ற, விவசாயிகள் போர்செட்டுக்களுக்கு இலவச மின்சாரம் அளித்து இன்றுவரையிலும் தமிழக விவசாயத்தைக் காப்பாற்றி வருவது, போக்குவரத்துத் துறையை அரசுடமையாக்கி ஒரே நாளில் பல லட்சம் தமிழர்களை அரசு ஊழியர்களாக்கியது.... அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி, அவர்கள் வாழ்க்கை நிலையை தரம் உயர்த்தியது.... இப்படியாக இன்னும் எழுத எழுத வந்து கொண்டிருக்கும் அளவிற்கு இன்றைய நிலையில் தமிழகத்தின் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்ற அனைத்து மக்களின் மிகக் குறைந்த அளவிலான ஒரு நாளைய ஊதியமே 250 ரூபாய் என்ற அளவிற்கு வந்துள்ள நிலையில்....
....வந்துள்ள நிலையில்.... (கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க மக்கா)
இன்றைக்கு, மின் இணைப்பு இல்லாதே வீடே தமிழகத்தில் இல்லை, டியூப் லைட், ஃபேன் இல்லாத வீடும் இல்லை, டீவி, மிக்ஸி, கிரண்டர், அயர்ன் பாக்ஸ் இல்லாத வீடும் இல்லை, இதைத் தவிர்த்து தண்ணி மோட்டார், ஏஸி என்று பெரும்பாலான வீடுகளில் இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேர் புதிது புதிதாக வீடு கட்டுகின்றனர், குக்கிராமங்கள் வரை டியூப் லைட்டுக்களால் வீதிகள் மிளிர்கின்றன, எண்ணற்ற பெரும் தொழிற்சாலைகள், லட்சக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள்.... கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மக்களுக்குமான வேலை வாய்ப்பு இங்கேயே உறுதி செய்யப்பட்டிருக்கின்றது......
நடுவில் எம்.ஜி.அர், அவ்வப்பொழுது ஜெயலலிதா என்று வந்து இந்த வளர்ச்சிகளை ஃப்ரீஸ் பண்ணி வைத்தாலும், இந்த பாழாய்ப்போன தமிழர்கள் மீண்டும் மீண்டும் தூக்கம் கலைந்து திமுகவை ஆட்சிக்கு வரவழைத்து, இந்த வளமைகளை மீண்டும் தொடர வைத்து தமதாக்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்....!!!
திராவிட ஆட்சி முதன் முதலாக 1967இல் துவங்குவதற்கு முன்னால் கூட காங்கிரஸுக்கு பெரிய பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் உண்மையான திராவிட ஆட்சிக்குப் பிறகு ஒவ்வொரு தடவையும் வருகின்ற எங்களது இந்த அ திராவிட ஆட்சி, அந்த வளர்ச்சியின் வேகங்களைக் குறைப்பதற்கும், அந்த வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து செயலாற்ற முடியாமலும், எவ்வளவு சிரமப்பட்டு தத்தளித்துக்கொண்டிருக்கின்றது என்பதை பொது மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்!!!
அவர்கள் நிறைய பள்ளிக் கல்லூரிகள், தொழிற்சாலைகள் என்று திறந்து வைத்து விட்டார்கள் அதற்கு எவன் மின்சாரம் தருவது? அவர்கள் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்துவிட்டார்கள் அதற்கு யார் பணம் கட்டுவது? அவர்கள் தனி நபர் வருமானத்தை உயர்த்தி விட்டதால் அவனவன் சொந்த வீடு கட்ட ஆரம்பித்து விட்டான், அதற்கெல்லாம் அதிகப்படியான மின்சாரத்தை நாங்கள் எப்படி தரமுடியும்? அவர்கள் நிறைய சம்பாதிக்கும் நபர்கள் எண்ணிக்கையை பெருக்கி விட்டதால் ஏஸி, பெரிய பெரிய டீவி இதெல்லாம் வச்சிக்கிட்டு மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தினால் நாங்கள் என்ன செய்ய முடியும்????
மின் கட்டணத்தை உயர்த்தி, மின் பயன்பாட்ட குறைக்க வைக்கும் வழியைத்தான் எங்களால் செய்ய முடியும். இந்தப் பிரச்சினையை எல்லாம் தீர்க்க அவர்கள் எட்டு மின் உற்பத்தி திட்டங்கள் போட்டு 7600 மெகாவாட் மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்து, அவை அனைத்தும் 2011லேயே முக்கால், பாதி, கால் கிணறு தாண்டிய நிலையில் இருக்கின்றது என்று சொன்னார்கள்....
ஆனால் அதை எல்லாம் தொடர்ந்து செய்து முடித்திட திறமையான அமைச்சரோ அதிகாரிகளோ எங்களிம் இல்லை என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை? அதிகாரிகளை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கும் எங்கள் நிலையையும் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள் மக்களே...!! விலையில்லா ஆடு, மாடு, லேப்டாப், அரை பவும் தாலித்தங்கம், அம்மா உணவகம், ஸ்கூல் பேக், செறுப்பு, பல்பொடி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்... இப்படி உங்களிடம் ஓட்டு அறுவடை செய்ய வாரி இறைத்திருக்கும் இலவசங்களுக்கே எங்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்கும் போது, இந்த மின் உற்பத்தி திட்டங்களுக்கு எல்லாம் எப்படி எங்களால் பணம் செலவு செய்ய முடியும் என்று சொல்லுங்கள் மக்களே...!! அதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குகிறோம்... அந்த கூடுதல் செலவை உங்கள் தலையில் கட்டண உயர்வாக வைத்துத்தானே... ஈடுகட்ட முடியும்???!!!
வெளி மாநிலத்தில் இல்லாமல் இங்கேயே குறைந்த விலைக்கு வாங்கலாமே என்கிறார் கடந்த ஆட்சியாளர், உங்களிடம் ஓட்டு வாங்க ஓட்டுக்கு 200. 500 ந்னு அவர் கொடுத்திருந்தால், இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்....!!!!
இப்பொழுது சொல்லுங்கள் மக்களே.... இந்த மின் கட்டண உயர்வுக்கு எல்லாம், நாங்கள் காரணமா? அல்லது முந்தைய திமுக ஆட்சியாளர்களின்.... அடித்தட்டு மக்களை எல்லாம் அல்ட்ரா மாடர்னாக மாற்றிய திட்டங்கள் காரணமா????

சொல்லுங்கள் மக்களே... சொல்லுங்கள்...!!!!


4 comments:

Anonymous said...

poda loosu

Anonymous said...

Kena payale!!!

கொக்கரக்கோ..!!! said...

நன்றிகள் பல அனானிகளே :)

மனோ said...

changed some of the thoughts about DMK. all those growth was brought by DMK. IF they dint involved in land case, they could have been in ruling now. Every district has land grabbing case. erode, salem, dindukal, madurai, kovai, etc.but next time they have to come w/o nehru, ponmudi, NKKP Raja, pongalur palanisamy karuppasamy. r the main culprits. bettr luck next time. i am not against admk also.