Tuesday, May 6, 2014

திமுக, மு.க.ஸ்டாலின், கலைஞர், விடுதலைப் புலிகள் - ஒரு அரசியல் கதம்பம்!

திரு மு.க. ஸ்டாலின் அவர்களே, நான் செய்ய வேண்டிய வேலைகள், கடமைகள் அனைத்தையும் நீங்கள் செய்து கொண்டிருப்பதாக உங்கள் தொண்டர்கள் பீத்தலாத்தல் செய்து கொண்டிருக்கின்றார்களே.....?!

நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்... ஸாரி சவால் விடுகிறேன்.....

செண்ட்ரல் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கின்றீர்கள்...

அதேப் போன்று காஷ்மீர் தீவிரவாதிகளுடனான போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரரின் இல்லம் சென்று மரியாதை செய்துள்ளீர்கள்...

ஒத்துக்கறேன்... இதெல்லாமே நான் செய்ய வேண்டிய வேலை தான், ஆனால் நீங்கள் செய்துள்ளீர்கள்....

ஆனால், நான் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டு இருக்கும் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் எனக்குப் பதிலாக நீங்கள் ஆஜராக முடியுமா? ஆஜராக முடியுமா? ஆஜராக முடியுமா????

அம்மா அடிமைகள்: பேஷ் பேஷ், அம்மான்னா அம்மா தான்! இதுக்கு அவங்க எப்புடி பதில் சொல்லுவாங்கன்னு பார்ப்போம்.

பொது மக்கள்: ஙேஏஏஏஏ....!!


=================================================================

/////காஷ்மீர் விடுதலை போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய இராணுவ ஊழியர் முகுந்தனின் குடும்பத்திற்கு நம் ஆழ்ந்த் இரங்கல்கள்! ///// - நாம் தமிழர் இயக்கத்தினர்

ஒரு இளைஞன் இப்படி எழுதுகின்ற அளவிற்கு அவனை மூளைச் சலவை செய்து வைத்து,.... விட்டால் தமிழகத்தில் இன்னும் ஒரு முள்ளி வாய்க்கால் கொடூரத்தையும், முள் வேலி முகாம்களையும் உருவாக்கிட முயன்று கொண்டிருக்கும் சீமான வகையறாக்களை உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தின் உண்மையான நடுநிலை மக்கள், இதை வெறுமனே கலைஞர் எதிர்ப்பு என்ற கோணத்தில் பார்க்காமல், நாளைய நம் நிம்மதியான வாழ்கைக்கு வேட்டு வைக்கும், இந்த மாதிரியான இளைஞர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த, ஒன்றிணைய வேண்டும்.


=================================================================

சீறி சபாரத்தினம் தொடங்கி, பத்மநாபாவில் தொடர்ந்து..., மாத்தையா வரை துரோகின்னு இவிங்க போட்டுத்தள்ளுன ஆயிரக் கணக்கான ஆளுங்க பட்டியலில் இருக்குற அத்தனை பேருமே தமிழர்கள் தான்! அதிலும் அவங்க அனைவருமே தனி ஈழத்திற்காக ஆயுதமேந்தி சிங்களர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் தான்.....!

அதே மாதிரி தான் 2008 முதல் கலைஞரையும் துரோகின்னு முத்திரை குத்தி கடிச்சி குதறி எடுக்குறானுங்க!

எத்தனை காலத்துக்கு தாண்டா துரோகி துரோகின்னு சொல்லியே தமிழர்களை மட்டும் போட்டுத் தள்ளுவீங்க? ஒரு ஜெயவர்த்தனேவையோ, ஒரு சந்திரிகாவையோ, ஒரு ராஜபக்‌ஷேவையோ உங்களால போட முடிஞ்சுதா? அது போகட்டும், உங்க மூஞ்சில காறித் துப்பி, இந்திய எல்லையிலேயே கால் வைககக் கூடாதுன்னு துரத்தி அடிச்ச சுனா சாமியையோ, ஜெயலலிதாவையோ எதிர்த்து சின்ன அறிக்கை கூட உங்களால கொடுக்க முடிஞ்சுதா?

ஆனா அவங்க கூடயோ, அவங்க இருக்குற கட்சியிலோ கூட்டணி வச்சிக்கிட்டு, பேசற பேச்சைப் பாரு? வெளக்குமாத்து கட்டைங்க!!!


================================================================

விடுதலைப்புலிகளையோ, பிரபாகரனையோ விமர்சிப்பது, ஆபத்தானது, அபத்தமானது, தேவையற்றது, அவர்களை வெறுக்க வேண்டாம் என்று எழுதுகின்ற திமுக ஆதரவாளர்களுக்கான எனது பதில் அல்லது விளக்கம்...!
===========================

ஏன்? இந்த ஆட்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? இல்லை பிரபாகரன் தான் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? அதுவும் கூட இல்லை, கலைஞர் என்ன விமர்சிக்கப்படுவதற்காக மட்டுமே அவதரித்தவரா???

2008 இல் இருந்து அவர்களுக்கு விளக்கம் தந்தாயிற்று. 2009க்குப் பிறகு அவர்கள் கோபத்தின் உச்சத்தைப் பொறுத்துக்கொண்டு, பதில் சொல்லியாயிற்று,,,, 2011 தேர்தலில் அவர்கள் ஆடிய ஆபாச அர்ச்சனைகளுக்கு கொஞ்சமாக வைக்கோ, நெடுமாறன் வகையறாக்களை கையில் எடுத்துப் பேசி அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி பதில் கொடுத்தாயிற்று...

ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் ஆயிரம் தவறுகளை செய்துவிட்டு, அநியாயமாக குற்றத்தை திமுக/கலைஞர் மேல் தூக்கிப் போடுவதும், அதை ஆரிய ஊடகங்களும், ஆரியர்களும் திமுகவை அழிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதும், இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இணையம் பக்கம் வந்திருந்த பல லட்சம் இளைஞர்கள் திமுக/கலைஞருக்கு எதிராக மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதும்....

என்று மிகப் பெரிய பேரிழப்பை திமுக சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இதற்கு மேல் வாளாவிருப்பதில் அர்த்தம் இல்லை. திமுகவினர் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற இந்த எழுச்சியானது..... இனி கைக்கூலிகள் வைக்கோ, நெடுமாறன், சீமான் வகையறாக்களை சாடி பிரயோஜனம் இல்லை என்பதை உண்ர்ந்ததன் வெளிப்பாடே!!

மாறாக விடுதலைப்புலிகள்/பிரபாகரனின் முட்டாள்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும் தோலுரித்து தொங்கவிட்டால் தான் அவர்களும் அடங்குவார்கள், இப்பொழுது சம காலத்தில் இணையம் பக்கம் வந்து கொண்டிருக்கின்ற இளைஞர்களையும் அவர்கள் மூளைச்சலவை செய்வதில் இருந்து காப்பாற்ற முடியும் என்ற நிலையையும் உருவாக்கியிருக்கின்றது.

ஆகவே இந்த எழுச்சியை அடக்கவோ, அணைக்கவோ முற்பட வேண்டாம். திமுகவை படுகுழியில் தள்ள வேண்டாம்...!!!!!



2 comments:

வேகநரி said...

நியாயமான கேள்விகள். சிறந்த விளக்கங்கள்.
அது என்ன விதமான ஒரு நம்பிக்கையோ தவறுகளின் இருப்பிடமான விடுதலைப்புலிகளையோ,பிரபாகரனையோ விமர்சிக்க கூடாதென்பது!

Anonymous said...

2g theriala loosu pasangala