Tuesday, February 4, 2014

அரசியல் கதம்பம் - LAST ONE WEEK....!

இந்த வருஷத்துக்கு மொதோ மொதோ கூடுற சட்டமற்ற கூட்டத்தொடர், ஒரு பதினைஞ்சு இருவது நாளுக்கு நடந்துச்சினா, நம்ம தமிழ்நாட்டுல கடந்து மூனு மாசமா நடந்த, அடுத்த மூனு மாசத்துக்கு நடக்கவிருக்குற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளையெல்லாம் பேசி தீர்த்து, கூட்டணிக் கட்சி எதிர்க்கட்சி காரங்க கருத்துக்களையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர சரியா இருக்கும்....

ஆனா அதெல்லாம் வேண்டாத வேலைங்கற மாதிரியே ஒரு நாலஞ்சு நாள் மட்டும், மாச கடேசில கணக்கு காமிக்க கேசு போடுற போலீஸ் கணக்கா இந்த கூட்டத்தொடரை நடத்துறாங்க....

சரி போவட்டும், இருக்குறதே நாலு நாளு தான் இதுலயும் அங்க என்னடான்னா? எதிர்க்கட்சியோட உட்கட்சி பிரச்சினையையும், ஒரு தலைவரின் குடும்ப பிரச்சினையையும் பேசி கலாய்க்கிறதுன்னா என்ன அர்த்தம்????

ஓக்கே அது முக்கியமான பிரச்சினைன்னு நீங்க சொல்றீங்களா? ஏத்துக்குறோம், இன்னிய தேதில எதிர்க்கட்சி தலைவரை விட அரசு அதிகாரம் அதிகம் கொண்டவர் முதல்வர் தானே? அவர் குடும்பத்துல அல்லது அவரது தோழிக்கும் அவருக்கும் நடந்த பிரச்சினை, அதுவும் கட்சிப்பொருப்பாளர்கள் நூற்றுக்கணக்கானவர்களை மாற்றும் அளவிற்கு சென்ற பிரச்சினை பத்தியும் பேசித்தீத்துடுவோம்ன்னு......

நம்ம தளப்தி சொல்றார்......

நியாயம் தானே அவரு சொல்றது?!

இதெல்லாத்தையும் வுட்டுப்புட்டு அழகிரி வூட்டு கக்கூஸ்ல போயி குந்திக்கிட்டு பயாஸ்கோப்பு காட்டி, அங்க இருக்குற சின்னப்புள்ளங்கள எல்லாம் கூட்டி பஞ்சு மிட்டாய் கொடுத்து பேட்டி எடுத்துப் போடுறாய்ங்க....!!!

போங்கய்யா நீங்களும் உங்க ஊடக தர்மமும்...!!


************************************************************************

கலைஞர் திமுக தலைவரா இருக்குறதுனால, கலைஞர் டீவில திமுகவுக்கு ஆதரவான செய்திகள் வரும்.....

ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளரா இருக்குறதுனால ஜெயா டீவில அதிமுகவுக்கு ஆதரவான் செய்திகள் வரும்....

இதே மாதிரி தான் மக்கள் டீவியும்...

இதெல்லாம் ஓக்கே! 

அதனால இந்த டீவிலல்லாம் வர்ற அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகளை வைத்து நாம் ஒரு கட்சிக்கு ஆதரவான அல்லது எதிரான முடிவுகளை எடுக்க முடியாது... எடுக்கவும் கூடாது..!

இதுவும் ஓக்கே..!

இதே மாதிரி ஐ ஜே கே ங்கற ஒரு கட்சி, அது அதி தீவிர மோடி மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் தான் தன் ஆரம்ப காலம் தொட்டு, மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் பாஜகவுக்கு தன்னோட ஆதரவை அவர்கள் கூட்டணி அமைக்க முயற்சி எடுக்கும் முன்பாகவே வெளிப்படையாக அறிவித்து செயல்பட்டும் வருக்கிறது. அப்படிப்பட்ட அந்த கட்சியின் தலவரோட டீவி புதிய தலைமுறை......

அந்த டீவில வர்ற அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகள் எல்லாம் நடுநிலைமையானது என்று எண்ணி யாரவாது நினைச்சிட்டிருந்தீங்கன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....

ஸாரி... இதுவரைக்கும் உங்களுக்கு புரியலைன்னாலும், இதுக்குமேலயும் அத நம்பி, அதில் வரும் செய்திகள் அல்லது விவாதங்களின் அடிப்படையில் ஆதாரமா வச்சிக்கிட்டு அரசியல் பேசுனீங்கன்னா........, பேசுனீங்கன்னா..... நீங்க பெரிய டூபாக்கூர் தான் ஸார்....!!!!


**********************************************************************

எப்பா.... ஒன்னரை வருஷமா பொதுக்குழுவெல்லாம் கூட்டி தனிச்சி நிக்கப்போறோம்.... நாற்பதுலயும் நிக்கப்போறோம்.... பிரதமராவப் போறோம்னெல்லாம் உதார் விட்டுக்கிட்டு திரிஞ்சாய்ங்க.....

இதக் கேட்டுட்டு, வழக்கம் போல நம்ம மானங்கெட்ட ஜால்ரா ஊடகமெல்லாம், அம்மா அதிரடி, ஆட்டுக்குட்டி காமெடின்னெல்லாம் தலைப்புப் போட்டு எழுதி எழுதி தள்ளுனாய்ங்க.....

இப்ப என்னன்னா? ரெண்டு நாளா வரிசைல வந்து ஒவ்வொருத்தரா ஜோடி போட்டுட்டுப் போறாய்ங்க....

அத இந்த நாறவாய் நாளேடுகளும் அம்மாவின் கூட்டணி முழக்கம்ன்னு வாந்தி எடுத்து வச்சிருக்காய்ங்க....!!!

கூட்டணி வக்கிலன்னா, அதிரடிங்கறான்.....! கூட்டணி வச்சா, முழக்கம்ங்கறான்....!!!

இதே திமுகவுல....

கூட்டணி வக்கிலன்னா, தனிச்சிவிடப்பட்ட திமுகங்கறான்...! கூட்டணி வச்சா, வழியில்லாம வழுக்கிவிழுந்த திமுகங்கறான்....!!!

ஹேய்.... எதாச்சும் ஒரு ஃபார்முக்கு வாங்கடா... மக்கள்லாம் உங்கள புரிஞ்சிக்கா ஆரம்பிச்சிட்டாங்கடா....!!! இப்புடியே போனீங்கன்னா ரொம்ப அசிங்கப்பட்டுடுவீங்க... ஆமா!!!!


**********************************************************************

நேத்து முன் தினம் விஜயகாந்த் பேசுனதை கூட்டி கழிச்சி, ஜம்புல்டு செண்டன்ஸ் கோக்குறமாதிரி எடுத்துப் போட்டு பார்த்து புரிஞ்சிக்கிட்ட வரைக்கும்......

1. ஜெயலலிதாவை தாக்கு தாக்குன்னு தாக்குனதால கண்டிப்பா ஜெயலலிதா கூட கூட்டணி வச்சுக்க மாட்டார்.

2. ஜாதிக்கட்சி, மதக் கட்சி, இலங்கை பிரச்சினையை சொல்லி ஓட்டு வாங்குற கட்சி இதெல்லாம் வரக்கூடதுங்கற மாதிரி தெளிவாவும் நமக்கு புரியாத மாதிரியும் பேசுனதால பாஜக கூட்டணியில சேர்ற வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லைங்கற மாதிரியும் தெரியுது.

3. ஞானதேசிகன் வாழ்த்து அனுப்பியிருப்பதும், ஒரு இடத்தில் சோனியா காந்திய உயர்வா பேசுனதுனாலயும் காங்கிரஸோட கூட்டணி வைப்பாரோன்னு ஒரு டவுட்டு வருது.

4. திமுக தலைவரை கலைஞர்ன்னு சொன்னதும், திமுகவையும் கலைஞரையும் ஒரு வார்த்தை கூட திட்டாததும் வச்சி பார்த்தா.., ஒரு வேளை காங்கிரஸோடு சேர்ந்து திமுகவுக்கு ரூட்டு போடுற மாதிரியும் தெரியுது.

5. கடேசில இவர் கேட்ட கேள்விக்கு எல்லாம் தொண்டர்கள் எப்படி கையாட்டினாலும், அவர்கள் கூட்டணி வேணாம்ன்னு தான் சொல்றாங்கன்னு இவரே சொன்னத வச்சிப் பார்த்தா???? பேரம் எதுவும் சரியா படியலன்னா, தொண்டர்கள் விருப்பப்படி தனியா நிக்கறேன்னு சொல்லி ஓட்டு வாங்கலாம்ன்னும் ஒரு கணக்கு இருக்குறதும் புரியுது!

மேல உள்ள அஞ்சு பாய்ண்ட்டையும் வச்சி நீங்களே கூட்டி கழிச்சி ஒரு முடிவுக்கு வந்துக்குங்க மக்கா...! இப்பவே ஒரு ஃபுல்லு சாத்துன மாதிரி கிர்ர்ருங்க்து...!!!!



No comments: