Thursday, February 6, 2014

கெஜ்ரிவால்கள் இதை உணர்வார்களா????!!!


ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட ஆம் ஆத்மி கட்சியோட உறுப்பினராவும், தீவிர ஆதரவாளராகவும் இருந்த ஒரு ஆட்டோ ஓட்டும் தொழிலாளி, இன்றைக்கு அக் கட்சியோட தீவிரமான எதிரியாக மாறியதோடு மட்டுமல்லாமல், அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுக்கும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து கைதாகியிருக்கின்றார்....!!!

இது செய்தி....   ஆனா இதுல நாம கவனிக்க வேண்டிய விடயம் அல்லது சித்தாந்தம் சார்ந்த ஒரு கருத்து, இப்படியாக எதுவோ ஒரு புண்ணாக்கு இருக்கு!

ஒரு குறுகிய நிலப்பரப்பில் வசிக்கின்ற, கிட்டத்தட்ட பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட, பல்வேறு மொழிகள் பேசக்கூடிய, பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த....

பூர்வீக உரிமை சார்ந்தோ, விவசாயம் அல்லது அது சம்பந்தமான தொழில்கள் சார்ந்தோ இல்லாமல்....

ஒருவருக்கொருவர், இது போன்ற தலைமுறை கடந்த பிணைப்புகள் எதுவும் இல்லாமல் சேர்ந்து வாழ்கின்ற மக்களிடம்.....

அவர்கள் அனைவருக்குமான அன்றாட வாழ்வியல் தொடர்பான சில அபிலாஷைகள் அல்லது சங்கடங்கள் அல்லது நெருக்கடிகள் அல்லது தேவைகள்....   இப்படி சிலவற்றை துல்லியமாக கணிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற ஒருவர் அல்லது ஒரு குழு அந்த உணர்வுகளைத் தெளிவாக தூண்டிவிட்டால்.....

அம்மக்கள் எந்த பாகுபாடும் இன்றி அந்த தலைவனையோ அல்லது அந்தக் குழுவையோ ஆதரித்து ஷண நேரத்தில் முடிவெடுத்து வாக்களிப்பது என்பது மிகவும் எளிதான விடயம் தான்!!!

ஆனால் அப்படி நொடி நேரத்தில் முடிவெடுத்து வாக்களித்தவர்கள், அவர்களின் அந்த தூண்டிவிடப்பட்ட உணர்வுகள் அல்லது நம்பிக்கைகள் அதே வேகத்தில் நிறைவேற்றப்படா விட்டாலோ அல்லது அப்படி நிறைவேற்றுவதில் சின்ன பிழை அல்லது குறைவு ஏற்பட்டாலோ கூட, அந்தத் தலைவனுக்கோ, குழுவுக்கு எதிராக அதே நொடிப்பொழுதில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும் தயங்கமாட்டார்கள்... அல்லது அதே மாதிரி மாற்றிக்கொள்ளவும் தயாராய் இருப்பார்கள்..!!!

இது தான் யதார்த்தம்...!  இது தான் நிதர்சனம்...!  இது தான் இப்பொழுது டில்லியில் நடந்து கொண்டிருக்கின்றது....!!  இதற்கு ஒரு உதாரணம் தான் முதல் பாராவில் சொல்லப்பட்டிருக்கின்ற செய்தி...!!!

ஆகவே தொலைநோக்கில், நீண்ட தூரம் பயணித்து, மக்களுக்கு சமூக நீதியின் அடிப்படையிலும், அடிமைப்பட்டுக் கிடக்கின்ற அனைத்துத் தரப்பு மக்களின் கல்வியறிவை மேம்படுத்துகின்ற செயலின் அடிப்படையிலும், ஒரு நாட்டில் ஒரு குடையின் கீழ் வசிக்கின்ற ஒரு பெரிய சமுதாயத்தையே முதலில் அவற்றில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து..., அதற்குத் தேவையான சட்டதிட்டங்களை வடிவமைத்து, அதைச் செயல்படுத்தி.....

பிறகு ஏற்றத்தாழ்வுகளற்ற அந்த சமுதாயத்தை உலகத் தரத்திற்கு மேம்படுத்தி, உலக அளவில் வளர்ந்த சமுதாய மக்களுக்கு நிகரான குடிமக்களைப் பெற்ற ஒரு நாடாக தங்கள் நாட்டை நிர்மாணிக்கும் இலக்கோடு......

ஒரு தலைவன் அல்லது ஒரு குழு அல்லது ஒரு இயக்கம் தங்களுடைய கொள்கைகளை சிந்தித்து, வாதப் பிரதிவாதங்கள் நிகழ்த்தி, சிறந்ததாக வடிவமைத்துக் கொண்டு....

அதை மக்களிடம் தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு களம் இறங்கி தொய்வில்லாமல் செயல்பட்டால்.... அக்கட்சி ஆட்சியதிகாரத்தைப் பிடிக்க குறைந்த பட்சம் இந்த தொலைத்தொடர்பு வசதிகள் கொண்ட காலகட்டத்திலேயே கூட பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம்...!!!

அப்படியொரு தொலை நோக்குச் சித்தாந்தக்களுடன் செயல்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் ஒரு இயக்கத்தை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று...!!!

அதை விடுத்து மக்களுக்கு போதையை ஏற்றி விட்டு, அவர்கள் கையை நீட்டும் போது ஊறுகாயாக தன்னை முன்னிறுத்திக் கொண்டவர்கள், போதை வடிந்தவுடன் தேவையற்ற குப்பையாகத்தான் தெரிவார்கள்...!!!

கெஜ்ரிவால்கள் இதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் தான் நல்லது. அதை விடுத்து மக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான தீர்வுக்காகத்தான் ஆட்சியே தனக்கு வேண்டும் என்று எண்ணினால் அதை அதிகாரிகளே செய்து விடுவார்கள். பேரியக்கங்களும், கட்சிகளும் தேவையில்லை.

ஆனால் அதிகாரிகளின் ஆட்சி என்பது ஆரம்பத்தில் உவப்பாகத்தான் தோன்றும் ஆனால் போகப் போக அதன் அடக்குமுறைகளும், அடிமைத்தனத்தை வளர்க்கக் கூடிய எதேச்சாதிகாரங்களையும் மக்கள் உணரும் போது அதை விட நரகம் எதுவுமே இருக்க முடியாது.

படித்த இளைஞர்கள் முதலில் இதை உணர்ந்து அரசியல் ஞானம் பெற வேண்டும்.


2 comments:

ராஜி said...

நல்ல கருத்து

வேகநரி said...

//..சமுதாயத்தை உலகத் தரத்திற்கு மேம்படுத்தி, உலக அளவில் வளர்ந்த சமுதாய மக்களுக்கு நிகரான குடிமக்களைப் பெற்ற ஒரு நாடாக தங்கள் நாட்டை நிர்மாணிக்கும் இலக்கோடு.....//
இதே தான். இந்தியர்களின் தேவை இது தான்.