Tuesday, July 12, 2011

வேதாரண்யத்து வலைஞனே...!

2011 ஆம் வருடம், ஜனவரி 23 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!
 

 வேதரண்யத்து வலைஞனே!
வீழ்ந்து பட்டாயே (குரல்)வளையில்...!

வெந்து தணிந்தாயே, சந்தனமாக;
வருந்தி தவிக்கிறோம் (ஜ)சட(ல)மாக.

மாற்றுத் திறனாளி நீ... உடலாலே!
மாறாத தியாகியானாய்... உலகிலே..!

உன் ஒரு உயிருக்கு ஓராயிரம் பலி வாங்கியிருக்கும் - பழைய சோழர் படை..!
பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டவருக்கு உன்னை - படையலிட்டிருக்கிறது வீணர் படை..!

பக்கத்து ஊர் பாண்டியனுக்காக
போய் விட்டாயா பாதுகாப்பாக...!?

பார்த்துப் பார்த்துப் பழகி மட்டுமே போய்விட்ட - எங்களுக்கு
பயந்து பயந்து வாழ மட்டுமே - இனி விதி போலும்!

பக்கத்து வீட்டில் தானே பாடை என்று தேமேயிருந்தோமே - இன்று
பத்து நாளைக்கு ஒரு பாடை தேடி வருகிறதே - இங்கு!

இப்படியே விட்டால் இது நாளுக்கு பத்து என்று ஆகிவிடாதோ?
இனியொரு விதி செய்யாவிட்டால் நாளும் பொழுதும் - இங்கு அழுகுரல் தானோ!?

ஒரு சொடுக்கில் மாற்றி இருக்கலாம்,  இக் கொடுமையை - ஆனால்
வெறும் சம்பிரதாய நிவாரணங்களால், மறக்கடிக்கின்றனர் - ஆட்சியாளர்கள்! 

என்ன செய்யப் போகிறாய் இந்திய தமிழினமே?
எழுந்து ஒன்றிணைந்து போராடு - உலகத் தமிழனோடு...!


திஸ்கி: பத்து நாட்களுக்கு முன் பாண்டியன் என்ற மீனவர், இன்று ஜெயக்குமார்...  ஒரு மாற்றுத் திறனாளி என்று கூட பாராமல் கழுத்தறுத்திருக்கிறார்கள்...  நெஞ்சம் பொறுக்கவில்லை. அவர்களை அழிக்கச் செல்வதற்கு பாலம் கட்ட உதவிய ஒரு அணிலின் நிலையிலிருந்து, சிறு கல்லை எடுத்து வைத்திருக்கிறேன். அவ்வளவே!

No comments: