வணக்கம் இணைய நண்பர்களே!
2006 முதல் தொடர்ந்து தமிழ் இணைய எழுத்துக்களின் வாசகனாக இருந்து வந்த சௌம்யன் என்னும் நான், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் "கொக்கரக்கோ" என்ற பெயரில் புதிதாக வலைப்பூ ஒன்று kokkarakko2011@gmail.com என்ற கூகுல் ஐடி யில் தொடங்கி எழுதி வந்தேன்.
அந்த வலைத்தளத்தில் மட்டுமே 40 பதிவுகள் வரையிலும் எழுதியிருந்த நிலையில், சென்ற வாரம் என்னுடைய ஐடி ஹேக் செய்யப்பட்டு, எவ்வளவு முயன்றும் இதுவரையிலும் திரும்பப் பெற இயலவில்லை. ஆகவே இதற்கு மேலும் காத்துக்கொண்டிருக்க வேண்டாம் என்று தான் kokkarakkosowmian@gmail.com என்ற புதிய ஐடி யில் "கொக்கரக்கோ..!!!" என்ற அதே பெயரில் மீண்டும் புதிய வலைப்பூவை ஆரம்பித்து உங்களை எல்லாம் இம்சை செய்ய வந்திருக்கின்றேன் (!)
பழைய கணக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பதால் அதில் எழுதிய பதிவுகளை அப்படியே என்னால் மீட்டெடுக்க இயலவில்லை. எனினும் அந்த கட்டுரைகளை தனி ஃபைலில் எழுதிதான் போஸ்ட் செய்திருந்தேன். அதை ஒவ்வொன்றாக, அவைகள் எழுதப்பட்ட தேதியை மட்டும் மேலே இணைத்து இந்த தளத்தில் வெளியிடலாம் என்றிருக்கின்றேன்.
வழக்கம் போல் என்னுடைய இந்த புதிய தளத்திற்கும், தங்களது மேலான வருகையையும், கருத்துப் பரிமாற்றங்களையும் ஆவலுடன் எதிர்நோக்கும்....
வை. சௌம்யன்.
4 comments:
அன்பின் சௌம்யன் - தொலைந்தது தொலையட்டும் - அனைத்திற்கும் தான் நகல் இருக்கிறதே ! ஏன் கவ்லை ! தூள் கெளப்புங்க - புதிய வலைப்பூவினிற்கு நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
இந்த வேர்டி வெரிஃபிகேஷனை எடுத்துடுங்கப்பா
மிக்க நன்றி சீனா சார்.
போனது போகட்டும். தொடர்ந்து கலக்குங்க
Post a Comment